அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகள்

அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகள் :

சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த எண்ணையில் எந்தவிதமான திரிகளை போட்டு விளக்கேற்றி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். 

இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு எண்ணெயில் ஏதோவொரு திரி போட்டு விளக்கேற்றி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். 

பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். 

நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகளை பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்கள் மற்றும் எண்ணெய், திரி 

1. வசியம் - காராம் பசு நெய் அல்லது தாமரை நூல் திரி.

2. தம்பனம் - ஆதளைக்கொட்டை எண்ணெய் மற்றும் பஞ்சுத்திரி.

3. மோகனம் - நல்லெண்ணெய் மற்றும் கன்னி நூல் திரி.

4. உச்சாடனம் - புங்கெண்ணெய் அல்லது இலவம்பஞ்சு திரி.
 
5. பேதனம் - புன்னைக்கொட்டை எண்ணெய் அல்லது துணித்திரி.

6. ஆகர்ஷணம் - எரண்டத்து எண்ணெய் மற்றும் வெள்ளெருக்கன் திரி.

7. வித்வேஷனம் - பசு + ஆடு + பன்றி நெய் மற்றும் தாமரை நூல்திரி.

8. மாரணம் - வேப்பெண்ணெய் மற்றும் வேலிப்பருத்தி திரி.

மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

© சித்தர்கள் உலகம்